Thursday, June 14, 2018

16 பேரைக் ஏற்றுக்கொள்ள பெசிலின் நிபந்தனை

,


14 JUNE 2018





ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெறும் வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment