Sunday, June 10, 2018

தேர்தல் ஒன்று வந்தாலே ஸ்ரீ ல.சு.க. 16 பேரின் உள்நோக்கம் தெரியவரும்- பிரசன்ன

June 11. 2018

எதிர்வரும் தேர்தலின் போதுதான் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேருடைய உண்மையான நோக்கம் என்னவென்று நாட்டுக்குத் தெரியவரும் என பிரசன்ன ரணதுங்க எம்.பி. தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

வெளியேறிய 16 பேரும் ஒன்றில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை ஏற்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைய வேண்டும். இல்லாவிடின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருக்க வேண்டும். மைத்திபால சிறிசேன ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு, மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்திருப்பதில் எந்தவித பயனுமில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment