June 13, 2018
கத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (Open Workplaces)** திறந்த வெளிப் பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வு நேரம் கத்தார் நிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி நன்பகல் 11:30 மணி முதல் மாலை 3:00 வரை திறந்த வெளியில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கு அமா்த்தப்படக் கூடாது என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நிறுவனங்கள், பணிபுரியும் மணித்தியாலங்களை இரண்டு ஷிப்ட்களாகப் பிரித்து காலை ஷிப்ட்டுக்கு 5 மணித்தியாலங்களையும், ஏனைய மணித்தியாலங்களை 3 மணிக்குப்பிறகும் அமைத்துக் கொள்ளும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றாக நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு - open workplaces என்பது பாதை நிர்மானம், பாலங்கள் கட்டுமானம் போன்ற திறந்த வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களைக் குறிக்கும்.
0 comments:
Post a Comment